ஞாயிறு முற்றம் : 10 டிசம்பர் 2017


ஏடகம் அமைப்பின் ஞாயிறு முற்றம் தொடர் சொற்பொழிவின் மூன்றாவது நிகழ்ச்சி 10.12.2017 மாலை தஞ்சாவூர் தெற்கு வீதி ஜவுளி செட்டித்தெரு விநாயகர் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. விழாவில்  வேளாண் விஞ்ஞானி திரு வ.பழனியப்பன் தலைமையேற்றார்.

தமிழக நாணயவியல் அறிஞர் திரு ஆறுமுக. சீதாராமன் தமிழகக் காசுகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

சங்க காலம் முதல் தற்காலம் வரையிலான காசுகளின் அமைப்பு, மதிப்பு, வடிவம், மொழி உள்ளிட்ட பல சிறப்புக்கூறுகளை எடுத்துக்கூறினார். 


முன்னதாக திரு வீரமணி வரவேற்புரையாற்றினார். புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தைச் சார்ந்த பி.ஜெயலட்சுமி நன்றி கூறினார். ஏடகம் நிறுவனர் திரு மணி.மாறன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான அறிஞர் பெருமக்களும், மாணவர்களும், பொதுமக்களும், ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 


Post a Comment

1 Comments